×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

Advertisement

தெலுங்கானா மாநிலத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ஒரு வயது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பதி. இவரது மனைவி சிவலி. இவர்களுக்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு சசிகலா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் திருமணமான சில மாதங்களில் இருந்து மனைவியை நடத்தை மீது திருப்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் சிவலி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவலி தனது கணவனை விட்டு பிரிந்து ஐதராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற திருப்பதி மீண்டும் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது சிவலி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்யும் உன்னுடன் வரமாட்டேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து திருப்பதியை தனது குழந்தையை ஆட்டோவில் தூக்கிக்கொண்டு சென்று விட்டார். அப்போது ஆட்டோவில் போகும் போது மனைவியிடம் செல்போனில் பேச முயற்சித்துள்ளார். ஆனால், சிவலி செல்போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருப்பதி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையறிந்த ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்து, ஆட்டோவை காவல் நிலையத்தில் விட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Doubt relationship #telungana #husband and wife #killed #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story