தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாத்ரூமில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை.. துப்புரவு பணியாளர் கைது.!

பாத்ரூமில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை.. துப்புரவு பணியாளர் கைது.!

Hospital employee harassment to boy in Kerala Advertisement

கேரளாவில் பாத்ரூமில் வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுவனை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, தாய் மருந்து வாங்க சென்றுள்ளார்.

KERALA

அப்போது அங்கிருந்த துப்புரவு ஊழியர் ரமீஸ் என்பவர் சிறுவனை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுவனை மிரட்டியுள்ளார்.

ஆனால் சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் துப்புரவு பணியாளரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் தனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ரமீஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Kannur #harassment #Hospital Employee #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story