×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆழ்ந்த இரங்கல்: மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... சோகத்தில் மக்கள்!!

ஆழ்ந்த இரங்கல்: மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... சோகத்தில் மக்கள்!!

Advertisement

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் அகமது - பர்வீன் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பர்வீன் தங்களது குடிசை வீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காய வைத்துள்ளார்.

அதனையடுத்து காய்ந்த துணிகளை எடுப்பதற்கு சென்ற போது இரும்பு கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு பர்வீன் மீது பாய்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அகமது ஓடி சென்று மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

தனது அப்பா, அம்மா இருவரும் மின்சாரம் பாய்ந்து துடிதுடிப்பதை பார்த்த அவர்களின் இரண்டு குழந்தைகளும் பெற்றோர்களை கட்டியணைத்த போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் பலியாகியுள்ள சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#telungana #electric shock #Hole family members
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story