நெஞ்சை உலுக்கிய பெங்களூரு மாணவன் சம்பவம்....!ஆசிரியர் கண்டித்ததால் நடந்த விபரீதம்....!
நெஞ்சை உலுக்கிய பெங்களூரு மாணவன் சம்பவம்....!ஆசிரியர் கண்டித்ததால் நடந்த விபரீதம்....!
பெங்களூரு சொக்கனஹல்லியை சேர்ந்தவர் முகமது நூரின் மகன் மோகின். மோகின் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு சென்றுள்ளார் மோகின்.
இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பிற்கு தேர்வு நடைபெற்று வருவதால் தனது தேர்வினை எழுத வகுப்பிற்குச் சென்றுள்ளார் மோகின். அப்போது தேர்வில் மோகின் காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த ஆசிரியர் மோகினை வகுப்பறையை விட்டு வெளியில் நிற்குமாரும், பின்பு நாளை பள்ளி வரும்போது பெற்றோரை அழைத்து வருமாறு கூறி இருக்கிறார் ஆசிரியர்.
இதனால் மனம் உடைந்த மாணவன் மோகின் தனது வீட்டின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362