×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயுடன் வந்த சிறுவனின் மீது சரமாரி தாக்குதல்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனால் நடந்த பயங்கரம்.!

தாயுடன் வந்த சிறுவனின் மீது சரமாரி தாக்குதல்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனால் நடந்த பயங்கரம்.!

Advertisement

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குறுகிராம், செக்டர் 18 பகுதியில் சம்பவத்தன்று, ஷோபா குமாரி என்ற பெண்மணி, தனது 6 வயது மகனுடன் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். பள்ளிக்கு சென்ற சிறுவனை தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், சிறுவனை கடுமையாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஷோபா, உடனடியாக சுதாரித்து மகனை காப்பாற்றி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் குமாரியின் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில், அவரின் கூச்சல் சட்டம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். 

மக்களிடம் சிக்கினால் நம்மை வெளுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் இளைஞன் அங்கிருந்து தப்ப, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகையில், இளைஞர் மனநலம் பாதிக்கப்ட்டவர் என்பது தெரியவந்தது. 

இதனால் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்த அதிகாரிகள், தகுந்த முறையில் பார்த்துக்கொள்ள கண்டித்து அறிவுறுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ அல்லது மேற்படி அவரால் யாரும் பாதிக்கப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #gurugram #haryana #cctv #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story