×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 ஆண்டுகளாக 15 வயது மகளுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

3 ஆண்டுகளாக 15 வயது மகளுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

 

12 வயதான மகளுக்கு மதுகொடுத்து போதையாக்கி தந்தை சீரழித்த சோகம் நடந்துள்ளது. சிறுமியின் தோழியால் காப்பாற்றப்பட்ட வாழ்க்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குறுகிராம் நகரில் 15 வயது சிறுமி, தனது 36 வயது தந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை மதபோதைக்கு அடிமையானவர் என்பதால், எப்போதும் பாதையிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு 12 வயது இருக்கையில் மதுபானம் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டியும் இருக்கிறார்.

சிறுமிக்கு விபரம் ஏதும் தெரியாத காரணத்தால், அவராலும் சுதாரிக்க இயலவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிய காமுகன், கடந்த 3 ஆண்டுகளாக சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

தந்தையின் செயல்பாடுகளில்  உள்ள தவறை உணர்ந்த சிறுமி, தனது தோழியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தோழியால் சிறுமியின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#haryana #gurugram #sexual abuse #Minor Girl #police #India #pocso
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story