14 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து சென்ற தோழி! அடுத்து அண்ணா போட்ட மாஸ்டர் பிளான்! தந்தை, நண்பர்கள் சேர்ந்து மொத்தம் 12 நாட்கள் மாறி மாறி... பெரும் அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப் பிரதேச ஹாபூரில் 14 வயது சிறுமி மீதான கொடூர வன்கொடுமை சம்பவம், போலீஸ் தாமத குற்றச்சாட்டு மற்றும் கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள்.
உத்தரப் பிரதேச ஹாபூரில் 14 வயது சிறுமி மீது நிகழ்ந்த பயங்கர வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பும் வகையில் இந்தச் சம்பவம் பரவி வருகிறது.
தோழியின் ஏமாற்றத்தில் சிறுமி சிக்கல்
சிறுமியின் தோழி, ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு உறவுக்கார அண்ணனுடன் இணைந்து போதைப்பொருள் கலந்த ஜுஸ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த சிறுமியை பின்னர் தோழியின் தந்தை மற்றும் அவரது இரு நண்பர்கள் நவம்பர் 13 முதல் 25 வரை தொடர்ச்சியாக sexual assault செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காணாமல் போன புகார் மற்றும் போலீஸின் அலட்சியம்
சிறுநீரக நோயால் அவதிப்படும் கணவரை கவனித்துக்கொண்டு கூலி வேலை செய்து வந்த சிறுமியின் தாய், 13 ஆம் தேதி மகள் காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் ஆரம்பத்தில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
மயக்க நிலையில் கண்டெடுத்த அதிர்ச்சி
ஒரு நபர் வழங்கிய தகவலின் பேரில், நவம்பர் 25 அன்று ஒரு வீட்டுக்குச் சென்ற தாய், மகளை மயங்கிய நிலையில் கண்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பிய சிறுமி, தன்னிடம் நடந்த கொடூரங்களை தாயிடம் பகிர்ந்துள்ளார்.
SP தலையீட்டுக்குப் பிறகே நடவடிக்கை
தாய் தொடர்ந்து கோரிக்கை வைத்தபோதும் போலீஸ் தாமதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிறகு விவகாரம் காவல் கண்காணிப்பாளர் குன்வர் ஞானஞ்சய் சிங் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபின், பில்குவா போலீஸ் வழக்கு பதிவு செய்தது. நவம்பர் 29 அன்று தோழியின் தந்தை மற்றும் அவரது நண்பர் உட்பட இருவரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் சிறுமிகள் பாதுகாப்பு குறித்த மிகப் பெரிய சவால்களை வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி! ஹாஸ்பிடலுக்கு போனதும் காத்திருந்து பேரதிர்ச்சி! வாலிபரை வலைவீசி தேடும் போலீஸ்...