×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனிமே என்னால இத மறைக்க முடியாது! தாய்க்கு இரவில் கனவில் வந்து கதறிய மகன்! பக்கத்து வீட்டுக்காரனுக்காக 3 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!

கள்ளக்காதலை கண்ட மகனை மாடியிலிருந்து தள்ளி கொன்ற தாய்க்கு குவாலியர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை. கனவு மூலம் வெளிச்சத்திற்கு வந்த கொடூர உண்மை.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், பெற்ற தாயே தனது குழந்தையை கொலை செய்த கொடூர மனநிலையை வெளிப்படுத்துகிறது. குவாலியர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு, சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தாக நினைத்த தந்தை

குவாலியர் பகுதியில் காவலராக பணியாற்றி வரும் தியான் சிங், கடந்த 2023 ஏப்ரல் 28ஆம் தேதி தனது மூன்று வயது மகன் ஜதின் (சன்னி) வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் பெற்றார். ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என அவர் நம்பியிருந்தார்.

கள்ளக்காதலை பார்த்த மகன்

அன்று மொட்டை மாடியில் தியான் சிங்கின் மனைவி ஜோதி ரத்தோர், பக்கத்து வீட்டுக்காரரான உதய் என்பவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த சிறுவன் ஜதின், தன் தாயை தவறான நிலையில் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த ரகசியம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், பெற்ற தாய் என்றும் பாராமல் ஜோதி தனது மகனை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் அடிக்கடி உள்ளாசமாக இருந்த மனைவி! கணவன் அடித்ததால் மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! சேலத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்....

கனவுகளில் தோன்றிய மகன்

மகன் இறந்து ஓராண்டு ஆன நிலையில், ஜோதியின் மனநிலை பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் அலறி விழித்துக்கொண்ட அவர், தனது மகன் கனவில் வந்து மிரட்டுவதாக கூறி அஞ்சியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்றும் மனஅமைதி கிடைக்காத நிலையில், ஒருகட்டத்தில் தனது கணவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டார்.

ரகசிய வீடியோ ஆதாரம்

"ஜதின் என் கனவில் அடிக்கடி வருகிறான், அவன் ஆன்மா என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை" என்று கூறி, தானும் தனது கள்ளக்காதலனும் சேர்ந்து மகனை கொன்றதாக ஜோதி அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார். இதனை தியான் சிங் ரகசியமாக வீடியோ எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

நீதிமன்ற தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ஜோதி ரத்தோரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், கள்ளக்காதலன் உதய் விடுவிக்கப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம், குடும்ப உறவுகளில் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது. ஆயுள் தண்டனை பெற்ற ஜோதியின் வழக்கு, சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: என் பொண்டாட்டி படுத்துறபாடு தாங்க முடியல! 14வது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்த கணவர்! வெளிவந்த அதிரவைக்கும் காரணம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gwalior Crime #தாய் கொலை வழக்கு #Life imprisonment #child murder #MP News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story