காலியாக இருந்த பேருந்து! கதவுகளை அடைத்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த நடத்துனர்!
மத்திய பிரதேச குவாலியர் பேருந்து நிலையத்தில் நடத்துனர் ஒருவர் திருமணமான பெண்ணை பேருந்துக்குள் பூட்டியபடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் மீண்டும் எழும் வகையில் மத்திய பிரதேசத்தில் நேர்ந்த பேருந்து வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியரில் நடந்த திகில் சம்பவம்
குவாலியர் சாலையோர பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள், திருமணமான பெண்ணை பேருந்து நடத்துனர் விஷ்ணு ஓஜா கொலை மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இப்பெணுக்கு இரண்டு வயது மகன் உள்ளார்.
நம்பிக்கையை தவறாக பயன்படுத்திய நடத்துனர்
முன்னதாக பேருந்து பயணத்தின் போது மொபைல் எண்ணை பெற்று, பேருந்து திரும்பிய பின் அழைப்பதாகக் கூறி இரவில் அழைத்தும் பேருந்தில் ஏறச் செய்தும் இந்த வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இரவு சுமார் 9.30 மணிக்கு காலியாக இருந்த பேருந்தின் கதவுகளை உள்ளே இருந்து பூட்டியதுடன் மிரட்டல் விடுத்து அவர் குற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசில் புகார் – தீவிர விசாரணை நடந்து வருகிறது
இந்த சம்பவம் குறித்து சிவபுரி காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் வசிக்கும் இடத்திலேயே இந்த அராஜகம் நடந்தது சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினை மீண்டும் பேசப்படும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வட்டாரங்களில் கூடிவருகிறது.
இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியை மீது தீராத ஆசை! இரண்டு இளையர்கள் சேர்ந்து போதைப்பொருள் கொடுத்து.... பரபரப்பு சம்பவம்!