ஓட்டுனருக்கு திடீர் மயக்கம்.. ஆற்றில் தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து.. 4 பேர் பரிதாப பலி.!
ஓட்டுனருக்கு திடீர் மயக்கம்.. ஆற்றில் தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து.. 4 பேர் பரிதாப பலி.!
குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா, உதய்பூர் பகுதியில் இருந்து, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூருக்கு பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இன்று காலை 6 மணியளவில் சந்த்பூர் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்தது.
அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக ஆற்றில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
பேருந்து ஓட்டுனருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதே விபத்திற்கு காரணம் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362