தன்னைக் கடித்த பாம்பை பழிவாங்க திருப்பி கடித்த நபர்- பின்னர் நடந்த விபரீதம்!
Gujarat man bite snake and died
குஜராத் மாநிலம் மகிசாகர் என்ற பகுதியில் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த 60 வயது நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கா சோளத்தை லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது அதனுள் இருந்து பாம்பு ஓன்று வெளியே வந்துள்ளது.
பாம்பை பார்த்த மற்ற நபர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓட, பார்வட் காலா என்ற 60 வயது நபர் தான் ஏற்கனவே பாம்பை பிடித்துள்ளதாகவும், இதை பாம்பையும் பிடித்து காட்டுவதாகவும் கூறி அந்த பாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த பாம்பு அந்த நபரின் கையிலும், முகத்திலும் கொத்தியிருக்கிறது. தன்னை கடித்த பாம்பை பழிவாங்க பார்வட் அந்த பாம்பை பிடித்து கடித்தே கொன்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கி கீழே விழ அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பார்வட் காலா பரிதமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362