×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாலி கட்டியபின் அனைவர் முன்னிலையிலும் மணமேடையில் மணமகன் செய்த காரியம்!! வைரலாகும் புகைப்படம்..

சமீபத்தில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆதிர்வாத

Advertisement

சமீபத்தில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர் சமீபத்தில் நடைப்பெற்ற தனது திருமணத்தில் மணப்பெண்ணின் காலில் விழுந்து பணிவாக ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் காலில் விழுந்ததற்கான 9 காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

1. என் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போறவள்.

2. என் குழந்தையை பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தை தொட்டு திரும்பப்போறவள்.

3. எனக்கு தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போறவள்.

4. அவளின் அன்புக்குரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் பயணிக்கப்போறவள்

5. எனது பரம்பரையை தொடரப்போறவள்.

6. இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம்.

7. இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கபோறவள்.

8. அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போறவள்.

9. என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கபோறவள்.

எனக்காக இவை அனைத்தையும் செய்ய போகும் என் மனைவிக்கு மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை என மணமகன் பதிவிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#North india #Wedding ceremony #Viral pic
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story