திருமணத்திற்கு சில நிமிடத்திற்கு முன் மாப்பிள்ளை செய்த தில்லுமுல்லு வேலை! அடித்து துவைத்த உறவினர்கள்! பகீர் வீடியோ!!
திருமணத்திற்கு சில நிமிடத்திற்கு முன் மாப்பிள்ளை செய்த தில்லுமுல்லு வேலை! அடித்து துவைத்த உறவினர்கள்! பகீர் வீடியோ!!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த முஜாமில் என்ற இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு சடங்குகள் நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது திடீரென மணமகன், மணமகள் குடும்பத்தாரிடம் அதிகமான வரதட்சணை கேட்டுள்ளார்.
அதாவது 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால்தான் நான் இந்த திருமணத்தை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் திருமண வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மாப்பிள்ளை மீது மணமகள் வீட்டாருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நன்கு விசாரணை மேற்கொண்ட போது அவருக்கு இதற்கு முன்பே ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. மேலும் அதுகுறித்த ஆதார புகைப்படங்களும் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் கோபமடைந்த குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் மணமகனை அடித்து துவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவரை கைது செய்த போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மணமகனை அடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362