இது பொண்ணா? இல்ல ரவுடியா? டெலிவரி ஊழியரை உள்ளே விடாததால் பேய் ஆட்டம் ஆடின பெண்! செக்யூரிட்டியின் முகத்தில் காலை ஓங்கி குத்தி... அதிர்ச்சி வீடியோ!!!
கிரேட்டர் நொய்டா குடியிருப்புப் பகுதியில் உணவு டெலிவரி நபரை அனுமதிக்காததால் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பெண் ஒருவர் தகராறில் ஈடுபட்டு தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், உணவு டெலிவரி நபரை குடியிருப்பு வளாகத்துக்குள் அனுமதிக்காததால் பெண் ஒருவர் பாதுகாப்புப் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் காவலாளிகளை தாக்கியதுடன், அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெலிவரி நபரை தடுத்ததால் வெடித்த வாக்குவாதம்
ஆகஸ்ட் 26-ம் தேதி இரவு கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவை எடுத்துக்கொண்டு சொசைட்டி கேட் பகுதிக்கு வந்த டெலிவரி நபரை, பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி செக்கியூரிட்டி கார்டுகள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதையும் படிங்க: "இனி அதிக கமிஷனுக்கு நோ.!" Swiggy,Zomato டெலிவரி நிறுவனங்களுக்கு ஹோட்டல் சங்கம் விடுத்த எச்சரிக்கை.!
இதுகுறித்து தகவல் அறிந்த பெண், தனது வீட்டில் இருந்து ஆத்திரத்துடன் நுழைவு வாயிலுக்கு வந்தார். டெலிவரி நபரை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கேட்டு பாதுகாப்புப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு நிலைமை பரபரப்பானது.
காவலாளிகளை தாக்கியதாக வீடியோவில் பதிவு
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், அந்தப் பெண் பாதுகாப்புப் பணியாளர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவது தெரிகிறது. ஒரு கட்டத்தில் காவலாளி ஒருவரை காலால் தாக்க முயல்வதுடன், மற்றொரு பாதுகாப்புப் பணியாளரை கையால் தாக்கியதாகவும் காட்சிகள் உள்ளன.
மேலும், தன்னை யாரும் நெருங்கக் கூடாது என எச்சரிக்கும் அவர், தங்களைச் சமாளிக்க முடியாவிட்டால் காவல்துறையை அழைக்குமாறு சவால் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. வீடியோவில் “906” என்ற எண்ணையும் அந்தப் பெண் குறிப்பிடுவது கேட்கிறது.
வீடியோ வைரலான நிலையில் போலீஸ் நடவடிக்கை
வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கிரேட்டர் நொய்டா காவல்துறையினர் விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு வளாகத்துக்குள் டெலிவரி நபரை அனுமதிக்காதது தொடர்பான வாக்குவாதம், பாதுகாப்புப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் அளவுக்கு சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Security Guard தாக்குதல் தொடர்பான வீடியோவுக்கும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இதையும் படிங்க: ரயிலில் பயணம் செய்யும் போது பெண் செய்த காரியம்! சுக்குநூறாக உடைந்த சூட்கேஸ்..... ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!!