விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாய கடன்கள் ரத்து! பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் அதிரடி!
good news for telungana farmers
நிலுவையில் உள்ள அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
வரும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான தெலங்கானா மாநில அரசின் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், விவசாயிகள் நலன், நீா்ப்பாசனம், சமூக பாதுகாப்பு, ஊரக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 5.83 லட்சம் விவசாயிகளுக்கு சொந்தமான ரூ.25,000-க்கும் குறைவான நிலக்கரி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய 1,198 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மாநில நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும்., "ஒவ்வொரு விவசாயிக்கும் அந்தந்த உள்ளூர் எம்.எல்.ஏ மூலம் காசோலை வடிவில் தனித்தனியாக விநியோகிக்கப்படும், என்றும் மாநில நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு 6,225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த செய்தி தெலுங்கானா விவசாயிகளுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362