×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகிழ்ச்சியான செய்தி.! ஆறு மாதங்களில் முடிவுக்கு வரும் கொரோனா தொற்று.!

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வ

Advertisement

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 2ஆவது அலைக்கு பிறகு இந்தியாவில் தற்போது சற்றே நோய் பரவல் குறைந்துள்ளது. ஆனாலும் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இன்னும் 6 மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கும் என மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் சுர்ஜீத் சிங் கூறுகையில், தற்போது இந்தியாவில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேராவது நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள். கொரோனா சாதாரண நோய் தொற்றுகள் போல மாறி சிகிச்சையில் குணமாக்கும் நோயாக மாறுவதுதான் பெருந்தொற்று முடிவதற்கான தொடக்க நிலை. இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் பெருந்தொற்று முடிவுக்கு வரத்தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story