×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான 10 நாட்களிலேயே கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வீட்டின் அறையில் காதல்மனைவி செய்த காரியம்!

Girl suicide after 10days marriage finishing

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் நர்ஷரி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் திராஜ்.  இவர் கடந்த சில ஆண்டுகளாக சுவாதி சிங் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் சம்மதத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு சுவாதி வழக்கம்போல அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.  ஆனால் காலை அவர் அறையில் இல்லை. இதனால் பதறிப்போன கணவர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.  பின்னர்  வீட்டிற்கு பின்புறம் இருந்த அவர்களது மற்றொரு வீட்டின் அறையை திறந்து பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

 பின்னர்  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தநிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்ட நிலையில் சுவாதியின் குடும்பத்தார்கள் நாங்கள் ஏழை என்பதால் அதனை சொல்லிக்காட்டி திராஜின் குடும்பத்தினர்கள் அடிக்கடி சுவாதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது இது கொலையாக இருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story