×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாக கூறி ஆசிரியர் செய்த கேடுக்கெட்ட காரியம்! பின்னர் அரங்கேறிய தரமான சம்பவம்!!

பஞ்சாப் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வி

Advertisement

பஞ்சாப் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அதே பள்ளியில் படித்துவந்த 10ம் வகுப்பு மாணவியின் மீது தவறான கண்ணோட்டம் இருந்துள்ளது. அடிக்கடி அந்த மாணவியை தனியாக அழைத்து பேசுவது, பாடம் சம்பந்தமாக பேசுவது போன்று அங்குமிங்கும் தொட்டு பேசுவது என இருந்து வந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து எதுவும் புரியாத அந்த மாணவி எப்பொழுதும் போல சாதாரணமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஆசிரியர் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டபோது, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என அந்த மாணவியை மட்டும் வகுப்பிலேயே இருக்க கூறியுள்ளார். அவரும் நம்பி காத்திருந்த நிலையில் வகுப்பில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசிரியர் விகாஸ் குமார் மொபைலில் தவறான ஆபாச படங்களை போட்டு காட்டி பின் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு உடன்படாமல் அந்த மாணவி ஆசிரியரை தள்ளிவிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைக் கேட்டு கொந்தளித்த அவர்கள் உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று விகாஸ் குமாரை அடித்து துவைத்து, அவரது முகத்தில் மையை ஊற்றி தாக்கியுள்ளனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆசிரியரைக் கைது செய்த போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #school #teacher
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story