பாவம் அந்த பிஞ்சு குழந்தை.. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்கு அம்மாவாகிய பெண்ணுக்கு கொரோனா!
Girl given birth to baby corono positive
ஜார்கண்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெண்மனிக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஜார்க்கண்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சதார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பெண்ணை மருத்துவமனையில் கவனித்து வந்த செவிலியரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லையாம். குழந்தையின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
குழந்தையை தக்க பாதுகாப்புடன் இருப்பதாகவும் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் பாதுகாப்புடன் கொடுக்கப்படுகிறதாம்.