×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுமார் 500 மீட்டர் தூரத்தில் மயங்கில் கிடந்த சிறுமி! பிறப்புறுப்பில் இரத்தம்... தலையில் கல்லால் அடித்து சிறுமியை சீரளித்த காமகொடூரன்! பகீர் சம்பவம்!!!

உத்திரபிரதேசம் காசியாபாத் பகுதியில் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீவிர கேள்விகளை எழுப்பும் வகையில், சிறுமி கொலை சம்பவம் காசியாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாக்லேட் வாக்குறுதியால் நடந்த கொடூரம்

காசியாபாத் நந்த கிராமம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தனது 4 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த நாள், வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

மாயமான சிறுமி: தந்தையின் பதட்டம்

வேலை முடித்து வீடு திரும்பிய தந்தை, மகளை காணாமல் போனதை அறிந்து அச்சமடைந்தார். அருகில் இருந்தவர்கள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் கடைக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் பதற்றம் அதிகரித்தது.

இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்! 10 ஆம் வகுப்பு சிறுமியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்ட 52 வயது நபர்! 16 வயது சிறுவன் வீடியோ எடுத்து மிரட்டி.... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி!

படுகாயங்களுடன் மீட்பு

சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் சிறுமி படுகாயங்களுடன் மயங்கி கிடந்ததை கண்ட தந்தை அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், மருத்தவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம் உறுதி

பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி மீது பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டதும், பின்னர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. உடலில் கடுமையான காயங்கள் இருப்பதும் பதிவாகியுள்ளது.

குற்றவாளி கைது: மக்கள் போராட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் மீண்டும் தீவிர கவலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு விரைவான நீதியும் கடுமையான தண்டனையும் அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

இதையும் படிங்க: 6 வயதுசிறுமியை சாக்லேட் ஆசைகாட்டி அழைத்து சென்ற காமுகொடூரன்! அடுத்து நடந்த அதிர்ச்சியால் ஆற்றில் மிதந்த சடலம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ghaziabad Crime #Child Safety India #சிறுமி கொலை #Uttar Pradesh News #Crime Against Children
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story