தமிழகத்திலிருந்து... 15,300 லிட்டர் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்த பால்.. கேரளாவிற்கு கடத்தல்..!!
தமிழகத்திலிருந்து... 15,300 லிட்டர் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்த பால்.. கேரளாவிற்கு கடத்தல்..!!
ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த பாலை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டுசெல்லப்பட்ட போது, கேரள பால்வள மேம்பாட்டுத்துறை பறிமுதல் செய்துள்ளது.
கலப்பட பால் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்குக் எடுத்து செல்லப்படுவதாக கேரள மாநில பால்வள மேம்பாட்டுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. கேரளாவின் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாக எடுத்துச் செல்வதாக தெரிந்தது.
இதனால் தென்காசியில் இருந்து பந்தளம் நோக்கி பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியை சோதனை செய்த போது, அதில் ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த பால் இருப்பது தெரிய வந்தது. 15,300 லிட்டர் கலப்பட பால் டேங்கர் லாரியில் இருந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வாடியூர் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த கலப்பட பால், பட்டணம் திட்டாவில் உள்ள பண்டலத்துக்குச் சென்று கொண்டிருந்தது என விசாரணையில் தெரிந்துள்ளது. பிடிக்கப்பட்ட லாரி புனலூர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு எவ்வளவு கலக்கப்பட்டுள்ளது, என்று அறிந்துகொள்ள திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வகத்திற்கு பாலின் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் என்றும். தொடர்ந்து சோதனையைத் தீவிரப்படுத்த திட்டமிடபட்டுள்ளதாக, கொல்லம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சுஜித் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362