இது உண்மையா? பிரதமர் மோடி ரீசார்ஜ் திட்டம்.! ஒரு வருஷத்திற்கு இலவசம் என இணையத்தில் பரவும் செய்தி! அதிரடி விளக்கம் இதோ...
பிரதமர் மோடி அறிவித்ததாக கூறப்படும் இலவச ரீசார்ஜ் திட்டம் போலி என PIB விளக்கம். தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை.
இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் பல முறை மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. அதுபோன்ற வகையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததாக கூறப்படும் இலவச ரீசார்ஜ் திட்டம் குறித்த செய்தி தற்போது போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
PIB விளக்கம்
பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெரிவித்ததாவது, யூடியூபில் 'SaoudKiTech' என்ற சேனலில் வெளியான வீடியோவில், அனைத்து மொபைல் பயனர்களுக்கும் ஒரு வருடத்திற்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் உண்மையற்றது எனவும், அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை எனவும் PIB வலியுறுத்தியுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள PIB, உண்மையான அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு 👉 myscheme.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாவம்ல.. என்னதா இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தானே! மலைப்பாம்பை மனசாட்சியே இல்லாமல் பைக்கில் தரதரவென... வைரல் வீடியோ!
சந்தேகமான தகவல்களைச் சரிபார்க்கும் வழிகள்
அரசுத் தகவல்களைப் பற்றிய சந்தேகத்துக்கிடமான செய்தி, படம் அல்லது வீடியோ கிடைத்தால், அதை உறுதிப்படுத்துவதற்காக கீழ்க்கண்ட வழிகளைப் பயன்படுத்தலாம்:
- எக்ஸ்: @PIBFactCheck
- வாட்ஸ்அப்: +91 8799711259
- மின்னஞ்சல்: [email protected]
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான தகவல்களை நம்பாமல், உண்மையான தகவல்களை மட்டுமே பரப்புமாறு பொதுமக்களிடம் பத்திரிகை தகவல் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசின் எந்தத் திட்டங்களும் அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். Fake News பரப்பாமல், உண்மையை மட்டுமே பகிர்வது சமூகத்தின் பொறுப்பு.
இதையும் படிங்க: என்னா ஆட்டம் ஆடுது! கயிற்றில் தொங்கியபடியே தலையை தூக்கி மரண பயத்தை காட்டிய கருநாகம்! திகில் வீடியோ...