×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளின் திருமணத்திற்காக 850-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய தந்தை! வனத்துறையினரின் வித்தியாசமான தண்டனை!

forest department give different punishment

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் தஷரத். இவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்தநிலையில் தனது மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாமல் கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் தனது சொந்த நிலத்தில் இருந்த 850-க்கு மேற்பட்ட மரங்களை விற்று திருமணம் நடத்தலாம் என முடிவு செய்து தோட்டத்தில் உள்ள மரங்களை வெட்டியுள்ளார்.

ஆனால் தஷரத் வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர். மரம் வெட்டியது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் தஷரத், மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாததால் இவ்வாறு செய்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து 850-க்கு மேற்பட்ட மரங்களை வெட்டி காட்டை சேதப்படுத்தியதாக கூறி, வனத்துறை அதிகாரிகள் தஷரத்துக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அந்த தண்டனை என்னவென்றால், தஷரத் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை விட இரு மடங்கு மரங்களை நட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கான பணத்தை வனத்துறையிடம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#forest #punishment #daughter marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story