அணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பரிதாப பலி.! சோக சம்பவம்.!
மத்திய பிரதேசத்தில் அணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள பச்சேத்தி அணைக்கு குழந்தைகளுடன் சென்ற 2 பெண்கள் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களுடன் இருந்த 3 குழந்தைகளும் அணைநீரில் மூக்கியுள்ளனர். இதில் மூச்சு திணறி அவர்கள் 5 பேரும் பரிதாபமாகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவதேஷ் சர்மாவிற்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு படையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
அந்த அணையில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் பச்சேத்தி அணையில் மூழ்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டு தொகையும், உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரமும் அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362