கோரதாண்டவமாடும் கொரோனா! இந்தியாவில் கொரோனோவிற்கு பலியான முதல் மருத்துவர்!
First doctor dead by coronovirus
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகின்றது. மேலும் இத்தகைய கொடூர வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில், 5734பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.166 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனோவை தடுக்க மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனோவால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தவர் சத்ருகன் பஞ்ச்வானி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அரவிந்தோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362