அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362