×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு  அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fire #accident #hospital
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story