×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.! 5 பேர் பலி.! பிரதமர் மோடி வேதனை.!

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 33 கரோனா நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.  காயமடைந்த பலர் மீட்கப்பட்டு உள்ளனர்.   அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியாத சூழலில், இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

ராஜ்கோட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிர் இழப்பு ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிர்வாகம் செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #hospital #fire accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story