×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 மகள்களின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்த தந்தை... தனி அறையில் தற்கொலை... மனைவி தான் காரணமா.?

3 மகள்களின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்த தந்தை... தனி அறையில் தற்கொலை... மனைவி தான் காரணமா.?

Advertisement

கேரள மாநிலத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மூன்று மகள்களின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டையம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமோன் (40). இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி கடந்த வருடம் இவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் விரக்தியில் இருந்திருக்கிறார் ஜோமோன்.

இந்நிலையில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த தனது மகள்களான அமேயா (7) ,அனாமிகா (10) மற்றும் அனன்யா (13) ஆகியோரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறார். மூன்று பேரின் கழுத்தையும் அறுத்துவிட்டு தனது வீட்டில் உள்ள தனி அறையில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜோமோன்.

வீட்டிற்குள்ளே அவரது மூன்று மகள்களும் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளனர். இன்று காலை இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட ஜோமோனின்  உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. மூன்று குழந்தைகளும் தற்போது வரை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Kottayam #3 children attempt to murder #father suicide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story