இப்படியும் ஒரு தந்தையா? தன் இருகுழந்தைகளையும் தூக்கமாத்திரை கொடுத்து கொன்ற தந்தை, வெளியான உருக்கமான இறுதி கடிதம்.!
தன் இருகுழந்தைகளையும் தூக்கமாத்திரை கொடுத்து கொன்ற தந்தை, வெளியான உருக்கமான இறுதி கடிதம்.!
தன் இருகுழந்தைகள் மற்றும் மனைவியை தூக்கமாத்திரை கொடுத்து கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி ரேவதி . இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகேந்திரன் திருப்பூரில் ஒரு கம்பெனியில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு,அது ரத்தத்தில் கலந்து விட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மகேந்திரன் தான் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள யாருமில்லை,அவர்கள் தனியாக கஷ்டப்படுவார்கள் என எண்ணி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலிசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்வதற்கு முன் மகேந்திரன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது .
அதில் எனக்கு மஞ்சள் காமாலை நோய் அதிகமாகி ரத்தத்துடன் சேர்ந்ததால் இனி நான் பிழைக்க மாட்டேன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .மேலும் நான் இறந்துவிட்டால் என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லை,எனவே எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கொடுத்தேன்.அதன்பிறகு நான் தூக்கிட்டு கொள்கிறேன். எங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362