×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 முறை கதறக்கதற தந்தையால் மகளுக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!!

17 முறை கதறக்கதற தந்தையால் மகளுக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!!

Advertisement

தான் தவமிருந்து பெற்றெடுத்த சொந்த மகளை தந்தை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு (வயது 45). இவரின் மனைவி ரேகா. ராமானுஜ சாஹு தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

தம்பதிகளுக்கு சண்டா (வயது 19) என்ற மகளும், சூரஜ் (வயது 16), திராஜ் (வயது 14), விஷால் (வயது 12) என்ற மகன்களும் இருக்கின்றனர். 

இவர்கள் தங்களின் வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக சாஹு மற்றும் ரேகா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதத்தில் சாஹு உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற நிலையில், மனைவியை கொலை செய்யும் எண்ணத்தோடு கத்தியுடன் துரத்தியுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகள் சண்டா, தாயை காப்பாற்ற நினைத்துள்ளார். மதம்பிடித்து வெறிகொண்டவர் போல இருந்த சாஹு, தனது மகளை ஆத்திரத்தில் 17 முறை கத்தியால் குத்தி கொடுரமாக கொலை செய்தார்.

அவரின் மனைவியின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவரின் 2 விரல்கள் துண்டிக்கப்பட்டன. உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. அவரது 3 மகன்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் சண்டாவின் உயிர் உறுப்புகளில் ஏற்பட்ட உட்காயத்தால் இரத்தம் கசிந்து துள்ளத்துடிக்க உயிரிழந்துள்ளார். பிற அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் ராமானுஜ சாதுவை கைது செய்தனர். சம்பவம் குறித்த சிசிடிவி வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gujarat #daughter #Latest news #குஜராத் #மகள் கொலை #சூரத் நகர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story