×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்ற மகளை கொலை செய்து, மகளின் தலையுடன் சாலையில் நடந்துசென்ற தந்தை.! அதிர்ச்சி காரணம்.!

உத்தரப் பிரதேசத்தில் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத தந்தை அவரின் தலையைத் துண்டித்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டம், பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ்குமார் . காய்கறி வியாபாரம் செய்துவரும் இவருக்கு 17 வயது மகள் இருந்துள்ளார். இந்தநிலையில், சர்வேஷ்குமாரின் மகள்  அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

மகளின் காதல் விஷயத்தை அறிந்த சர்வேஷ்குமார் மகளை எச்சரித்து உள்ளார். ஆனாலும் அவரது மக்கள் காதலை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்  அவரது மகள் காதலருடன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சர்வேஷ்குமார்,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மகளை கொலை செய்துள்ளார்.

மகளை கொலை செய்துவிட்டு தலையை துண்டித்து, கையோடு எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். துண்டிக்கப்பட்ட தலையுடன் அவர் சாலையில் நடந்து செல்வதை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சர்வேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story