×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளர்ப்பு பூனையால் தந்தை, மகன் உயிரிழந்த சோகம்.. காரணம் என்ன.?

வளர்ப்பு பூனையால் தந்தை, மகன் உயிரிழந்த சோகம்.. காரணம் என்ன.?

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அக்பர்பூர் நகரை சேர்ந்தவர் தேஜாஸ். இவரது மகன் அங்கத். இவர்கள் இருவரும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டில் செல்ல பிராணியாக பூனை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த இந்த பூனையுடன் குடும்பத்தினர் அனைவரும் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தெரு நாய் ஒன்று பூனையை கடித்தால் அடுத்த சில நாட்களில் நாயின் அறிகுறிகள் பூனைக்கு தென்பட ஆரம்பித்துள்ளது.

ஆனால் இதனை குடும்பத்தினர் யாரும் கண்டு கொள்ளாமல் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தந்தை மகன் இருவரையும் பூனை கீரி உள்ளது. இதில், அங்கத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூனையும் அறிகுறிகள் அவர்களிடம் தோன்ற தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மகனைத் தொடர்ந்து தந்தையும் நேற்றைய உயிரிழந்துள்ளார். இதில் பரிசோதனை செய்தலில் தந்தை மகன் இருவருக்கும் ரேபிஸ் தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #Cat bite #death #Kanpur #dog
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story