×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லியில் போராடி வந்த விவசாயி தற்கொலை. ! கடிதத்தில் இருந்த நெஞ்சை உருக்கும் செய்தி.!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

மத்திய அரசு கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர், காசிப்பூர்-உத்தரபிரதேச எல்லையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் பிலாஸ்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காசிப்பூர் எல்லையில் உள்ள கழிப்பறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த விவசாயி தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

அந்த கடிதத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்களின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது இறுதிச் சடங்குகள் உ.பி.-டெல்லி எல்லையில் தனது பேரக்குழந்தைகளால் நடத்தப்பட வேண்டும் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#farmer #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story