×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிங்கத்தின் பிடியில் சிக்கிய தனது பசு மாட்டை தந்திரமாக காப்பாற்றிய விவசாயி... வைரலாகும் வீடியோ!!

சிங்கத்தின் பிடியில் சிக்கிய தனது பசு மாட்டை தந்திரமாக காப்பாற்றிய விவசாயி... வைரலாகும் வீடியோ!!

Advertisement

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கீர் வனப்பகுதிக்கு அருகே பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கே வந்த பெண் சிங்கம் ஒன்று பசு மாட்டின் கழுத்தை கவ்வி இழுக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி எப்படியாவது மாட்டை காப்பாற்றி விட எண்ணியுள்ளார்.

அந்த விவசாயி சற்றும் யோசிக்காமல் உடனே அருகில் இருந்த செங்கல் கல்லை எடுத்து சிங்கத்தின் மீது வீசியுள்ளார். அதனை அடுத்து சிங்கம் தனது பிடியை விடுத்து காட்டு பகுதிக்குள் சென்று விட்டது. இந்நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் அந்த தைரியமான விவசாயிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#farmer #Caw #Save #lion
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story