டெல்லி போராட்ட களத்தில் வீடாக மாறிய லாரி.! விவசாயி செய்த நெகிழ்ச்சி செயல்.!
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியை சொகுசு வீடாக மாற்றியமைத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் சாலையோரம் கூடாரங்களை அமைத்தும், டிராக்டர் டிரைலர்கள் மீது தார்பாய் போட்டு மூடி இரவு நேரங்களில் அதில் தூங்குகின்றனர்.
அங்கு போராடும் பலர் போராட்டக்களத்திலேயே கம்பளி விரித்து தூங்குகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, உடைகளை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில், விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியை சொகுசு வீடாக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், விவசாயிகளுக்காக சேவை புரிய டிசம்பர் 2 ஆம் தேதி நான் இங்கு வந்தேன். எனது அனைத்து பணிகளையும் விட்டுவிட்டு 7 நாட்களாக இங்கு போராட்டத்தில் கலந்து கொண்டேன். எனக்கு வீடு மற்றும் குடும்பத்தினர் நினைவு வந்தது. இதனால் லாரியை வீடாக மாற்றினேன் என தெரிவித்தார்.
அந்த விவசாயி லாரியை வீடாக மாற்றிய இல்லத்தில், அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. சொகுசு இருக்கைகள், தொலைக்காட்சி, மொபைல் சார்ஜிங் வசதி, கழிப்பறை போன்றவை உள்ளன. மேலும் அங்கு போராடி வரும் விவசாயிகளுக்கு தேநீர், பகோடா போன்றவைகளைவழங்கி சேவையாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362