×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சத்தில் மக்கள்... அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு...!!

அச்சத்தில் மக்கள்... அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு...!!

Advertisement

இன்று அதிகாலை, அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் நிலநடுக்கத்தின் ஆழம் இருந்தது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது அட்சரேகை 7.97 மற்றும் தீர்க்கரேகை 91.65 என்று குறிப்பிட்டுள்ளது. ரிக்டர் அளவு கோவிலில் 6 க்கும் குறைவாக பதிவாகி இருப்பதால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

கடந்த இரண்டு மாத காலத்தில் ஹரியானா மற்றும் டெல்லி சுற்றுவட்டார பகுதிகளிலும், சில வடகிழக்கு மாநிலங்களும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் பதிவாகி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Andaman Islands #earthquake #Registers as 5 on the Richter scale
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story