#Breaking: வான்வழி பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி - DRDO அறிவிப்பு..!
#Breaking: வான்வழி பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி - DRDO அறிவிப்பு..!
ஒடிசாவில் உள்ள பாலாசோர் கடற்கரை பகுதியில், இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்யும் ஏவுகணை சோதனை நடந்தது.
எதிரிகளின் நடுத்தர அளவிலான வான்வழி தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், டி.ஆர்.டி.ஓ தயார் செய்திருந்த வான்வழி பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த சோதனையில் ஏவுகணை குறிப்பிட்ட தொலைவில் இருந்த இலக்கை துல்லியமாக நேரடியாக தாக்கி அழித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.