×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. தன்னை வளர்த்தவரின் உயிரை காக்க இரு நாய்கள் செய்த தியாகத்தை பார்த்தீர்களா! கண்கலங்க வைத்த சம்பவம்!!

உத்திர பிரதேச மாநிலம் ஜெய்ராம்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன். இவர் தனது வீட்ட

Advertisement

உத்திர பிரதேச மாநிலம் ஜெய்ராம்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன். இவர் தனது வீட்டில் ஷீரோ, கோக்கோ என்ற இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அந்த இரு நாய்களும் வீட்டின் முன் பயங்கரமாக குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. 

இதை கேட்டு வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது அங்கு பெரிய கருப்பு நிற விஷப் பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளது. மேலும் அந்த பாம்பை விரட்ட நாய் இரண்டும் கடுமையாக போராடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் நாயை கட்டுப்படுத்த பலரும் முயன்ற நிலையிலும் நாய்கள் விடாமல் பாம்புடன் சண்டைப்போட்டு அதனை கடித்து குதறியது.

இதில் இரு நாய்களும் பாம்பிடம் கடிப்பட்டுள்ளது. மேலும் விஷம் இரு நாயின் உடல் முழுவதும் பரவி சில நிமிடங்களிலேயே இருநாய்களும் உயிரிழந்து விட்டது. தனது உரிமையாளரின் உயிரை காக்க அந்த இரு நாய்களும் தனது உயிரை தியாகம் செய்த  சம்பவம் நாயின் உரிமையாளரை மட்டுமின்றி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snake #dog #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story