×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் சிறுமியை பலாத்காரம் செய்யவந்த 2 கயவர்கள்!. சிறுமி வளர்த்த நாயின் நெகிழ்ச்சி சம்பவம்!.

இளம் சிறுமியை பலாத்காரம் செய்யவந்த 2 கயவர்கள்!. சிறுமி வளர்த்த நாயின் நெகிழ்ச்சி சம்பவம்!.

Advertisement


மத்திய பிரதேச மாநிலத்தில்  சாகர் மாவட்டம் அருகே உள்ள கரிலா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கொசுவை விரட்டுவதற்காக வைக்கோல் தேடி வெளியில் சென்றுள்ளார் 14 வயது நிரம்பிய சிறுமி .

சிறுமி தனியாக செல்வதை பார்த்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி சிறுமியை மிரட்டி, அருகாமையில் இருந்த குடிசைக்குள் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பயந்துபோன சிறுமி காப்பாத்துமாறு கத்தியுள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு உடனடியாக குடிசை பகுதிக்கு ஓடிய அவரது வளர்ப்பு நாய், சிறுமியின் வளர்ப்பு நாய் அந்த கயவர்களை கடித்து இரு இளைஞர்களிடம் போராடியுள்ளது.

சிறுமியின் வளர்ப்பு நாய் செய்த செயலால் குடிசையிலிருந்து சிறுமி வெளியேறி தப்பி ஓடினார். அந்த சிறுமி வளர்த்த நாய் அந்த கயவர்களை விடாமல் சண்டையிட்டவரே, குரைத்துக் கொண்டிருந்ததால் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துள்ளனர்.

அதனை அறிந்த இரண்டு கயவர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் நடந்தவை பற்றி சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

சிறுமி சொன்னதை  கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட இருவரையும்  கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dog #saved girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story