×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருத்துவரை சீரழித்து கொலை செய்த குற்றவாளியின் உடலில் இப்படியொரு பாதிப்பா? அவர் விடுத்த கோரிக்கையை பார்த்தீர்களா!

doctor deadcase accust have kidney problem

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் டூ வீலர் பஞ்சரான நிலையில், அவருக்கு உதவுவதுபோல தாமே முன்வந்த லாரி டிரைவர்கள் 4பேர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று, வாயில் மதுவை ஊற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரை கொடூரமாக எரித்து கொன்றுள்ளனர் .

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு  ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களை செர்லப்பள்ளி சிறையில் அடைத்துள்ளனர்.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள குற்றவாளிகளை அவர்களது குடும்பத்தினர்கள் யாரும் சென்று இதுவரை சந்திக்கவில்லை. மேலும் அவர்கள்  நால்வருக்கும் ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டோம் என அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான சின்ன கேசவலு என்பவர் சிறை அதிகாரிகளிடம் தனக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்ததால், தன்னுடைய ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், அதற்காக நான் நிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறேன். அதையே சிறையில் தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் கேசவலுவின் தாய் ஏற்கனவே என் மகன் அந்த கொடூரத்தை செய்திருந்தால் அப்பெண் எரிக்கப்பட்டது போல அவனையும் எரித்துவிடுங்கள் என  கூறியிருந்தார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kidney problem #Disha #hydrabad
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story