தீவிரமாக பரவிவரும் கொரோனா! பொதுமக்களுக்காக கஷ்டப்படும் மருத்துவர் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.!
doctor adviced to public
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று பல நாடுகளிலும் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்களும் வெளிப்பயணகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார்.