ஆண்களுக்கு நோ என்ட்ரி.. பானிபூரி கடையில் குவிந்த பெண்கள் கூட்டம்.. வைரல் வீடியோ.!
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டெல்லியில் உள்ள ஒரு சாலையோர பானிபூரி கடை ஆண்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பெண்களுக்கு மட்டும் பானிபூரி விற்பனை செய்யப்படும் கடை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒட்டு மொத்த இந்தியாவிலும் பெண்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றம், வரதட்சணை, காதல் தொல்லை என பல பெயர்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
ஆண்களுக்கு அனுமதி இல்லை:
அவ்வப்போது நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் மக்களிடையே போராட்டம் போன்ற விஷயங்களையும் உண்டாக்குகிறது. இதனிடையே டெல்லியில் செயல்படும் சாலையோர பானிபூரி கடையில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதி வேகமாக வந்த ரயில்! தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்! அடுத்த நொடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த கொடூரம்! பகீர் வீடியோ....
இணையத்தில் டிரெண்ட்:
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சம்பந்தபட்ட கடையில் ஆண்களுக்கு பானி பூரி விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால் அந்த கடையில் பெண்கள் கூட்டம் மட்டும் அலைமோதி வருகிறது. இது தொடர்பான காணொளி வைரலாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.