×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய்.. உதவி கேட்ட பக்கத்து வீட்டுக்காரன், சிறுமிக்கு உபத்திரம் செய்த பயங்கரம்..!

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய்.. உதவி கேட்ட பக்கத்து வீட்டுக்காரன், சிறுமிக்கு உபத்திரம் செய்த பயங்கரம்..!

Advertisement

தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்காரரிடம் சிறுமி உதவி கேட்க, கொடூர எண்ணம் கொண்டவர் சிறுமியை மருந்தகத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் உள்ள பாண்டவ் நகரை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை சொந்த கிராமத்திற்கு வேலை விஷயமாக சென்றுவிட்ட நிலையில், சிறுமியும் - அவரின் நோய்வாய்ப்பட்ட தாயாரும் வீட்டில் தனியே இருந்துள்ளனர். 

அப்போது, சிறுமியின் தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, பதறிப்போன சிறுமி பக்கத்து வீட்டில் குடியிருந்தவரிடம் உதவி கேட்டுள்ளார். பக்கத்து வீட்டில் வசித்து வந்த அருண் என்பவர், சிறுமிக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார். 

மருந்து வாங்கி வரலாம் என சிறுமியை அழைத்து சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்திடுவேன் என்று கூறி தப்பி சென்றுள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் மருந்தகத்திற்கு சென்று தாய்க்கு மருந்து வாங்கி வீட்டிற்கு வந்த நிலையில், விஷயம் தொடர்பாக தாமாக முன்வந்து பாண்டவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருணை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #sexual abuse #police #Investigation #Neighborhood
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story