டெல்லியில் பழமை வாய்ந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... பதறிப்போன மக்கள்!!
டெல்லியில் பழமை வாய்ந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... பதறிப்போன மக்கள்!!
டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள பழமை வாய்ந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெல்லி சாஸ்திரி நகரில் அமைந்துள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்து காணப்பட்டதை அடுத்து அது மக்கள் தங்குவதற்கு உகந்தது அல்ல என்பதால் அதில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே காலி செய்து விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று திடீரென அந்த பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்து மக்கள் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் மக்கள் குடியிருப்பு பகுதியை ஏற்கனவே காலி செய்து விட்டனர். எனவே கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அப்பகுதி வழியாக சென்ற மக்களுக்கு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைப்பெற்று வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362