×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி, உரிமையாளர் உட்பட 3 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. அலுவலகத்தில் நடந்த பயங்கரம்.!

வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி, உரிமையாளர் உட்பட 3 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. அலுவலகத்தில் நடந்த பயங்கரம்.!

Advertisement

15 வயது சிறுமி வேலைக்கு சென்ற இடத்தில் உரிமையாளர் உட்பட 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சோகம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள புறநகர் பகுதியில் நரேலா பகுதி உள்ளது. இப்பகுதியில் சூ மற்றும் செருப்பு கடை வைத்து நடத்தி வருபவன் நரேந்திர் (வயது 40). இவனின் வீடும் அப்பகுதியிலேயே இருக்கிறது. நரேந்தரின் அண்டை வீட்டில் வசித்து வரும் இளைஞர்கள் மோதி (வயது 22), பாவிந்தர் (வயது 30). 

நரேந்தரின் கடையில் 15 வயது சிறுமி குடும்ப சூழ்நிலை காரணமாக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மூவரும் திட்டமிட்டு சிறுமிக்கு கொக்ககோலா குடிக்க கொடுத்துள்ளனர். அதில், மயக்க மருந்தை கலந்துள்ளனர். 

இதுதெரியாத சிறுமி குளிர்பானத்தை குடிக்கவே, அவர் அலுவலகத்தில் மயக்கமடைந்ததும் 3 காமுகர்களும் சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை எண்ணி கலங்கி இருக்கிறார். 

அவரை தங்களின் இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அவரின் வீட்டருகே விட்டுவிட்டு இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டி வந்துள்ளனர். வீட்டில் பெற்றோரிடம் தனக்கு நடந்ததை சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #Narela #Minor Girl #sexual abuse #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story