×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடுகுபுகுந்து பெண் சுட்டுக்கொலை; மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிர்ச்சி செயல்.!

வீடுகுபுகுந்து பெண் சுட்டுக்கொலை; மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிர்ச்சி செயல்.!

Advertisement


டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியை சேர்ந்த பெண்மணி சரிதா சர்மா. இவருக்கு பதின்ம வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி மஹதாப் என்பவருடன் பழகி வந்ததாக தெரியவருகிறது. 

இந்த விசயத்திற்கு சரிதா மற்றும் அவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சரிதா கடுமையான எதிர்ப்பு கூறியுள்ளார். இந்த விவகாரம் மஹாதப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை வீட்டில் இருந்த சரிதா சர்மாவை மஹதாப் வீடுபுகுந்து சுட்டுக்கொலை செய்தார். அவரின் நண்பருடன் சேர்ந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மஹதாப் கைதான பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #Shot Dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story