#BigBreaking: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து; உயிரை காப்பாற்ற 3வது மாடியில் இருந்து குதிக்கும் மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!
#BigBreaking: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து; உயிரை காப்பாற்ற 3வது மாடியில் இருந்து குதிக்கும் மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!

டெல்லியில் உள்ள மேற்கு கிரேட்டர் நொய்டா, கவுர் நகர் பகுதியில் கேலக்சி பிளாசா வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வணிக வளாகத்தில் இன்று திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களில் சிலர் தங்களின் உயிரை காப்பற்றிக்கொள்ள 3வது மாடியில் இருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழே குதிப்பவர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு படையினர் மெத்தை விரிப்பு பாணியை பின்பற்றி உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருகின்றனர்.