×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனி கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம்..! டிஜிசிஏவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இனி கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம்..! டிஜிசிஏவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Advertisement

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிஷங்கர் விமான பயணம் மேற்கொண்டபோது விமானங்களில் கொரொனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றாதது குறித்து புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நிலையில், நேற்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சாங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா தொற்று முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், விமானங்கள் போன்ற முழுவதும் மூடப்பட்ட இடங்கள் மற்றும் அமைப்புகளில் பூரண விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது மிகவும் அவசியமாகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிப்பதை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிறுவ ஊழியர்களுக்கு கொரோனா வழிமுறைகள் குறித்த உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்தில் இருந்தும் விமானநிலையத்தில் இருந்தும் வெளியேற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத சம்பந்தப்பட்ட பயணிகளை 'நோ ப்ளை லிஸ்ட்' எனப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்காக தடைவிதிக்கப்பட்ட நபர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

டிஜிசிஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுகுறித்து கூறும்போது, 'விமான பயணிகள் உணவு சாப்பிடும் போது மட்டுமே முகக்கவசங்களை அகற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அவர்கள் முறையாக பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்'.

இதனையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி கூறும்போது, "தண்ணீர் குடிக்கும்போது, உணவு சாப்பிடும்போது முகக்கவசங்களை அகற்றிக் கொள்ளலாம் எனவும், ஆனால் இதனை சாதகமாகக் கொண்டு விமானத்தில் பயணிக்கும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கக்கூடாது. 

முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #Passenger #Aeroplane #corona
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story