டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அப்பகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்காக அக்கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் அவரது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362