×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாடகைக்கு வீடுதேடிய 30 வயது பெண் பாலியல் பலாத்காரம்; வீடு காண்பிப்பதாக நடந்த பயங்கரம்.!

வாடகைக்கு வீடுதேடிய 30 வயது பெண் பாலியல் பலாத்காரம்; வீடு காண்பிப்பதாக நடந்த பயங்கரம்.!

Advertisement

 

டெல்லியில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள புராரி நகரில், 30 வயது பெண்மணி வாடகைக்கு வீடு தேடி இருக்கிறார். 

அப்போது, அவரை தொடர்புகொண்ட ஜிதேந்திரா சவுதாரி என்பவர், வாடகைக்கு வீடு இருப்பதாக கூறி ஆட்கள் இல்லாத வீடு ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு பெண்மணிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த நிலையில், அவர் தண்ணீரை குடித்ததும் மயங்கி இருக்கிறார். 

இதனையடுத்து, ஜிதேந்தர் மற்றும் அவரின் நண்பர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மயக்கம் தெளிந்து எழுந்த பெண்மணி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஜிதேந்திர சவுதாரி, அவரின் நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #Rape #sexual abuse #பாலியல் பலாத்காரம் #டெல்லி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story